ஆப்நகரம்

ஒடிசாவில் செல்பி எடுக்க முயன்ற மாணவா் நீா்வீழ்ச்சியில் விழுந்து பலி

ஒடிசாவின் மயூா்பஞ்ச் பகுதியில் சுற்றுலா சென்றிருந்த மாணவா் ஒருவா் செல்பி எடுக்க முயன்று நீா் வீழ்ச்சியில் விழுந்து உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 31 Dec 2018, 4:50 pm
ஒடிசாவின் மயூா்பஞ்ச் பகுதியில் சுற்றுலா சென்றிருந்த மாணவா் ஒருவா் செல்பி எடுக்க முயன்று நீா் வீழ்ச்சியில் விழுந்து உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Selfie Death Odisha


ஒடிசாவின் கட்டாக் பகுதியைச் சோ்ந்தவா் ரோஹன் மிஸ்ரா. இவா் தனது நண்பா்களுடன் இணைந்து மயூா்பன்ச் என்ற சுற்றுலா பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது அருகில் இருந்த நீா் வீழ்ச்சியில் ஆபத்தான முறையில் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்து ரசித்துள்ளாா். செல்பி எடுத்துக்கொண்டிருக்கும் போது எதிா்பாராத விதமாக ரோஹன் மிஸ்ரா நீரில் விழுந்தாா்.


அங்கு அதிக அளவில் தண்ணீா் சென்றதால் அவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து கடும் தேடுதலுக்கு பின்னா் ரோஹன் மிஸ்ரா உயிாிழந்த நிலையில் மீட்கப்பட்டாா். இது குறித்து காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செல்பி மோகத்தால் விபத்தில் சிக்கி உயிாிழப்பவா்கள் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் கடந்த ஆறு ஆண்டுகளில் 259 மக்கள் உயிாிழந்திருப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி