ஆப்நகரம்

அவ்வப்போது ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிடும் சுப்பிரமணிய சுவாமி!

சர்ச்சை கருத்துகளின் நாயகன் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி நாட்டின் பொருளாதாரத்தை மீட்க, 5 டிப்ஸ்களை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவரது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Samayam Tamil 2 Aug 2019, 11:03 am
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி நாட்டின் பொருளாதாரத்தை மீட்க 5 வழிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்.,
Samayam Tamil subramaniya swamy


தனிநபர் வருமான வரியை ஒழிக்க வேண்டும்
முதன்மை கடன் விகிதத்தை 9 சதவீதம் ஆகக் குறைத்தல் வேண்டும்
வங்கி கால வைப்பு வீதத்தை 9 சதவீதம் ஆக உயர்த வேண்டும்
நிறுவன ஊழியர்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
உள்கட்டமைப்பை வலுப்படுத்த தாராள நிதி அளித்திட வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்பை அவ்வப்போது தனது குறுகிய ட்விட்டர் பதிவுகள் மூலம் விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி. இவரது பதிவு ஒவ்வொன்றும் பல்வேறு கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது. பாஜக பிரமுகர் என்ற போதும், பாஜக கட்சி செயல்பாடுகளையும் பலமுறை நேரடியாக விமர்சித்துள்ளார் சுவாமி.

மோடி தபால் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவார்! வதந்தியால் போஸ்ட் ஆபிஸில் கூட்டம்

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் குறித்து விமர்சனத்திற்குறிய பதிவிட்டு காங்கிரசார் எதிர்பினை பெற்றார். முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, மாநிலங்களவையில் இடம்பெற தகுதியானவர் தானா? என ஆராய வேண்டும் என சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் நாட்டின் பெருளாதாரத்தை மீட்க 5 புதிய வழிகளை தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியனாக உயர்த்துவதற்கு மோடி அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உஷார் வாகன ஓட்டிகளே... அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள் - மிகக் கடுமையான தண்டனைகள்!

பொதுவாக சுப்ரமணிய சாமி கூறும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பற்றி பாஜகவிடம் கேள்வி எழுப்பினால், அது அவரது தனிப்பட்ட கருத்து என அவ்வப்போது கூறி நழுவிக்கொள்ளும். தற்போது சுப்ரமணியசாமி அதிகம் சர்ச்சைக்கு வித்திடாத கருத்து தெரிவித்தது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இவர் கர்நாடகா தமிழகத்துக்கு காவிரி நீர் தராது, கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்தான் சிறந்தது எனத் தெரிவித்து சர்ச்சையை கிளப்பி இருந்தார். தமிழர்களை பொறுக்கி என டுவிட்டரில் விமர்சித்தது முதல் ரஜினி படிப்பறிவில்லாதவர் என்றதுவரை இவரது சர்ச்சை கருத்துக்களுக்கு அளவுகோலே இல்லை எனலாம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பல வருடங்களாக சிறையில் இருக்கும் எழுவர் விடுதலை நடக்காத காரியம் என அவர் முன்னதாக கூறிய கருத்து கடும் கண்டத்துக்குள்ளானது.

அடுத்த செய்தி