ஆப்நகரம்

ஜிஎஸ்டி பற்றி மவுனம் சாதிக்கும் சுப்ரமணியன் சுவாமி!

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாராமல், சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிவரும் சுப்ரமணியன் சுவாமி, தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள ஜிஎஸ்டி மசோதா மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

TNN 4 Aug 2016, 2:37 pm
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாராமல், சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிவரும் சுப்ரமணியன் சுவாமி, தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள ஜிஎஸ்டி மசோதா மற்றும் அதன் சிறப்பம்சங்கள் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
Samayam Tamil subramanian swamy remains silent on gst cites loyalty to party
ஜிஎஸ்டி பற்றி மவுனம் சாதிக்கும் சுப்ரமணியன் சுவாமி!


குறிப்பாக, பாஜக., சார்பில் எம்பி., ஆக தேர்வு செய்யப்பட்ட சுப்ரமணியன் சுவாமி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் தொடர்பாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அவர், நிதியமைச்சர் பதவிக்கு முயற்சி செய்வதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவாக மட்டுமே சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அதன் செயல்பாடுகள், நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் நிபுணத்துவம் போன்றவை பற்றி அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. மத்திய அரசு எடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாகவும், டுவிட்டரில் சுப்ரமணியன் சுவாமி நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்கவும் மறுத்துவிட்டார். மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இன்றி தேங்கிக் கிடந்த ஜிஎஸ்டி மசோதா, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோரின் கடும் முயற்சியால்தான் நிறைவேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி