ஆப்நகரம்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு; சசி தரூர் ஆஜராக டெல்லி நீதிமன்றம் சம்மன்!

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 5 Jun 2018, 4:20 pm
டெல்லி: சுனந்தா புஷ்கர் மரண வழக்கில், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
Samayam Tamil Sashi Tharoor


கடந்த 2014, ஜனவரி 17ஆம் தேதி, டெல்லி லீலா பேலஸ் ஹோட்டல் அறை எண் 345ல், தொழிலதிபர் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுதொடர்பாக கடந்த மாதம் டெல்லி போலீஸ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில், சுனந்தா புஷ்கரின் கணவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, புஷ்கர் அளவுக்கு அதிகமான மன அழுத்த மற்றும் அல்பிராஸோலம் மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளார்.

அவ்வாறு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு, சசி தரூர் தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு எண் 302ன் கீழ், அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்காக போலீசார் பதிவு செய்திருந்தனர்.

ஆனால் சுனந்தா கொலை செய்யப்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீசார் கண்டறிந்தனர். இதனால் சட்டப் பிரிவு எண் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சசி தரூர் மீது சட்டப்பிரிவு 306, 498ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகையை டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் சிங்கிடம் சமர்பித்தனர்.

இந்த வழக்கில் வரும் ஜூலை 7ஆம் தேதி நேரில் ஆஜராக, சசி தரூருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Sunanda Pushkar death case Court summons Shashi Tharoor as an accused.

அடுத்த செய்தி