ஆப்நகரம்

திரிபுராவில் பாஜக வெல்வதற்கு முக்கிய காரணம் இவர் தான்!

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக அபரா வெற்றி பெற காரணமாக இருந்தது, சுனில் தியோதர் என்ற ஆர்எஸ்எஸ் பிரசாகர் ஆவார்.

Haaris Shaikh | Maharashtra Times 4 Mar 2018, 2:01 pm
திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக அபரா வெற்றி பெற காரணமாக இருந்தது, சுனில் தியோதர் என்ற ஆர்எஸ்எஸ் பிரசாகர் ஆவார்.
Samayam Tamil sunil deodhar the man who scripted bjps tripura victory
திரிபுராவில் பாஜக வெல்வதற்கு முக்கிய காரணம் இவர் தான்!


திரிபுராவில் சட்டமன்ற ஆயுட்காலம் முடியும் நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி, தேர்தல் நடைபெற்றது. இதில் 74% வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 ல் 43 தொகுதிகளில் மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் பாஜகவிற்கு ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆட்சியையே கைப்பற்றியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது


இந்நிலையில், பாஜகவின் இந்த வெற்றிக்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் மேகாலாயாவில் ஆர்.எஸ்.எஸ். பிரசாகராக இருந்த சுனில் தியோதர் ஆவார்.

திரிபுராவில் தேர்தல் வருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பாஜக சார்பில், திரிபுராவுக்கு அனுப்பப்பட்டார். 2014ம் ஆண்டு வாரணாசியில் நடந்த தேர்தலில் மோடிக்காக அதிதீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் சுனில்.

இதே போன்று திரிபுராவில் உள்ள குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டி பிரச்சாரம் மேற்கொண்ட சுனில் தயோதர், வன்முறைகளுக்கு முடிவு கட்டவும் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் கூறிய வார்த்தைகள் பிரச்சாரம் அங்குள்ள மக்களை யோசிக்க வைத்துள்ளது. எனவே தான் தற்போது திரிபுராவில் பாஜகவின் பலம் ஓங்கியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Haaris Shaikh

அடுத்த செய்தி