ஆப்நகரம்

அயோத்தி வழக்கு: ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

தலைமை நீதிபதி கொண்ட அமர்விலேயே விசாரிப்பதா? தினமும் வழக்கின் விசாரணையை நடத்தலாமா என்பவை குறித்து 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Oct 2018, 12:11 pm
அயோத்தியில் நிலப்பங்கீடு தொடர்பான வழக்கு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil dfd


அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என முடிவு செய்தது.

தொடர்ந்து அயோத்தி விவகாரம் தொடர்பான மனுக்களை புதிய அமர்வில் விசாரிப்பதாக அறிவித்தனர். இதன்படி, இன்று அயோத்தி வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கின் விசாரணையை இரண்டு மாதம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி கொண்ட அமர்விலேயே விசாரிப்பதா? தினமும் வழக்கின் விசாரணையை நடத்தலாமா என்பவை குறித்து 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் கோயிலுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் நிலத்தை அலகாபாத் நீதிமன்றம் மூன்று பங்குகளாக பிரிக்குமாறு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி