ஆப்நகரம்

நவ. 17ல் தலைமை நீதிபதி ஓய்வு,‘அக்.18க்கு மேல் ஒருநாள்கூட கிடையாது’: சுப்ரீம் கோர்ட்!

அக். 18ஆம் தேதிக்குள் வாதங்கள் நிறைவு பெற வேண்டும் என அயோத்தி வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 26 Sep 2019, 4:25 pm
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது. தொடர்ந்து 60 ஆண்டுகளாக அயோத்தியில் எந்த சமுதாயத்தின் கோயிலை நிறுவுவது, என வழக்கு நீதிமன்றங்களில் விசாரணை நடந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் அக். 18ஆம் தேதிக்குள் இருதரப்பு வாதங்களையும் நிறைவு செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறபித்துள்ளது.
Samayam Tamil பாபர் மசூதி


அக். 18ஆம் தேதி ஒருமணிநேரம் கூடுதலாக வாதாடினாலும் பரவாயில்லை, ஆனால் கண்டிப்பாக அதற்கு மேல் ஒருநாள்கூட அவகாசம் அளிக்க முடியாது எனத் தெளிவுபடக் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவ. 17ல் ஓய்வு பெறுகிறார். “ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறும் நாளன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகிவிடும், வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் தீர்ப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம், என்பதாலே அக். 18ஆம் தேதி விசாரணை நிறைவுசெய்யப்படுகிறது” என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணைக் காலத்தை நிர்ணயம் செய்தது குறித்து, “அக். 18ஆம் தேதிக்குள் விசாரணையை அவசரப்படுத்துவதால் இது யாராவது ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமாகச் செல்லும் சூழல் ஏற்படும்” என இருதரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர். எனினும், உச்ச நீதிமன்றம் தனது முடிவை உத்தரவாக வெளியிட்டுவிட்டது.

அடுத்த செய்தி