ஆப்நகரம்

தலைநகரில் தீபாவளி பட்டாசுக்குத் தடை

டெல்லியில் தீபாவளிப் பட்டாசுக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 9 Oct 2017, 3:02 pm
டெல்லியில் தீபாவளிப் பட்டாசுக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil supreme court bans fireworks on diwali in delhi ncr region
தலைநகரில் தீபாவளி பட்டாசுக்குத் தடை


தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக டெல்லியைச் சேர்ந்த 3 சிறுவர்களின் சார்பில் அவர்களுடைய தந்தையர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து பட்டாசு விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில், இத்தடை ரத்து செய்யப்பட்டது.

இச்சூழலில், டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது. மேலும், நவம்பர் 1ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி