இஸ்ரோவில் பிஎஸ்எல்வி-யின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலைகளின் திட்ட இயக்குநர், கிரையோஜெனிக் திட்ட இயக்குநர், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-யின் அசோசியேட் திட்ட இயக்குநர், திரவ எரிபொருள் புரோபல்ஷன் துணை திட்ட இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார் நம்பி நாராயணன். சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக இஸ்ரோவில் பணியாற்றி வந்த அவர் மீது, கடந்த 1994ம் ஆண்டில் வெளிநாட்டினருக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கூறி, கடந்த 1994ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கேரள போலீசாரால் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுஸியா உசேன் மூலம் இந்திய ராக்கெட் தொழில் நுட்பங்களை ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்றதாகவும், உளவு பார்த்ததாகவும் நம்பி நாராயணன் உட்பட மூன்று விஞ்ஞானிகள் அப்போது கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சிபிஐ, “குற்றசாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை; வழக்கை முடிக்கலாம்” என்று பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் 1998ம் ஆண்டு வாக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என நிரூபணமானது. வெறும் சந்தேகத்தின் பேரிலான வழக்கு என்று கூறி இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அவரது ஓய்வு காலம் வரை, பெரிய பொறுப்புகள் ஏதும் தரப்படாமலேயே கடந்த 2001ம் ஆண்டு இஸ்ரோவில் இருந்து நம்பி நாராயணன் ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் நம்பி நாராயணனை பொய்யாக சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரியான குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார், கேரளாவை சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளான விஜயன், தம்பிதுர்காதத், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் கேரள உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு முன்ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள உயர்நீதிமன்றம் 4 பேருக்கும் வழங்கிய முன்ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரித்து நான்கு வாரங்களுக்கு தீர்ப்பு வழங்க கேரள உயர்நீதிமன்றத்திற்கு ஆனையிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுடன் தொடர்பு.? மராட்டிய முன்னாள் அமைச்சருக்கு ஜாமின் மறுப்பு..!
மனு விசாரணை குறித்து நீதிபதிகள் கூறும்போது, மேல் முறையீடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றன. இறுதியில் உயர் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குள் முன்ஜாமீன் மனுக்களை விரைவில் முடிவெடுக்குமாறு உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது என்றனர்.
பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சிபிஐ, “குற்றசாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை; வழக்கை முடிக்கலாம்” என்று பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் 1998ம் ஆண்டு வாக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என நிரூபணமானது. வெறும் சந்தேகத்தின் பேரிலான வழக்கு என்று கூறி இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அவரது ஓய்வு காலம் வரை, பெரிய பொறுப்புகள் ஏதும் தரப்படாமலேயே கடந்த 2001ம் ஆண்டு இஸ்ரோவில் இருந்து நம்பி நாராயணன் ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் நம்பி நாராயணனை பொய்யாக சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரியான குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார், கேரளாவை சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளான விஜயன், தம்பிதுர்காதத், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் கேரள உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு முன்ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள உயர்நீதிமன்றம் 4 பேருக்கும் வழங்கிய முன்ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரித்து நான்கு வாரங்களுக்கு தீர்ப்பு வழங்க கேரள உயர்நீதிமன்றத்திற்கு ஆனையிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுடன் தொடர்பு.? மராட்டிய முன்னாள் அமைச்சருக்கு ஜாமின் மறுப்பு..!
மனு விசாரணை குறித்து நீதிபதிகள் கூறும்போது, மேல் முறையீடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றன. இறுதியில் உயர் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குள் முன்ஜாமீன் மனுக்களை விரைவில் முடிவெடுக்குமாறு உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கிறோம். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது என்றனர்.