ஆப்நகரம்

ஆமை வேகத்தில் வருமான வரித்துறை: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்ந்து தாமதிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 May 2018, 9:21 pm
வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்ந்து தாமதிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 667525-supreme-court-generic


"வருமான வரித்துறை ஒவ்வொரு வழக்கிலும் 200 நாட்கள் தாமதமாக மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறது. இதனை இன்னும் ஏன் நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்?" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், "10 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வரி தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறோம். வருமான வரித்துறையில் இதுவரை எந்த சீர்திருத்தத்தையும் ஏற்படவில்லை. இந்தக் குறையை கண்டிப்பாக தீர்த்தாக வேண்டும்." என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், "சிஸ்டம் மாறினால் இது சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், "சிஸ்டம் சரிசெய்யப்பட வேண்டியது வருமான வரித்துறையில்தான்" என்றனர்.

உயர்நீதிமன்றங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களிலும் வருமான வரித்துறை தாக்கல் செய்யும் 90% மேல்முறையீட்டு மனுக்கள் கால தாமதம் காரணமாக தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.

அடுத்த செய்தி