ஆப்நகரம்

அதிகரிக்கும் காவல் நிலைய மரணங்கள்: உச்ச நீதிமன்றம் கவலை

காவல்நிலைய மரணங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது

Samayam Tamil 5 Aug 2020, 7:48 pm
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
Samayam Tamil உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை, தடயங்களை அழித்தல் உட்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சாத்தான்குளத்தில் மேலும் சிலரும் இதுபோல் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் எனவும், அதில் சிலர் உயிரிழந்துள்ளனர் என்றும் வெளியாகி வரும் தகவல் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

அநீதியில் ஒருபோதும் ராமர் தோன்ற முடியாது... இது ராகுல் பஞ்ச்!!

அதேசமயம், இந்தியாவில் 2001 முதல் 2018ஆம் ஆண்டில் மட்டும் 1,727 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் பல வழக்குகளின் விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இந்த நிலையில், காவல் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில் போது, அதிகரித்து வரும் காவல்நிலைய மரணங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் செயல்படுகின்றனவா என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், காவல் நிலைய மரணங்கள் குறித்து பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம், மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி