ஆப்நகரம்

Indian Woman Army: பெண்களை இப்படியா நினைப்பீர்கள்?... மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்

​​பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். நாட்டில் மணமுறிவு சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம் கல்வி அறிவின் பெருக்கம் தான் என்று பா.ஜ.க. வின் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு பெண்கள் மீதான தன் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றமும் கண்டித்திருக்கிறது. ​

Samayam Tamil 17 Feb 2020, 6:21 pm
இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு வழங்கப்படுவது போல பெண்களுக்கும் இனி சமமான அளவில் உயர்பதவிகள் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil supreme court condemns central government for its view about woman in indian army
Indian Woman Army: பெண்களை இப்படியா நினைப்பீர்கள்?... மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்


இந்திய ராணுவத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றிய அதிகாரிகளுக்கான உயர் பதவிகள் குறித்த விவகாரங்களைக் கையாள பெண்களுக்கான நிரந்தர கமிஷன் ஒன்று அமைக்க வேண்டும் எனக்கோரி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த மனுவின் மீதான விசாரணையில் பதில் மனு அளித்த மத்திய அரசு பெண்கள் குடும்ப பங்களிப்பில் அதிகம் பங்கு வகிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும், ராணுவத்தில் அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் இந்த கருத்தை விமர்சித்த நீதிபதிகள் பெண்கள் மீதான பார்வையை அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற காரணங்களை காட்டி அவர்களது உரிமைகளை தடுக்க கூடாது என்றும் கூறியுள்ளனர்.

Mohan Bhagwat: அப்படியும் பேசுவோம், இப்படியும் பேசுவோம்... மணமுறிவு குறித்து மாற்றி மாற்றி பேசும் ஆர்.எஸ்.எஸ்.


மேலும் ராணுவத்தில் பெண் களுக்கு நிரந்தர கமிஷன் அமைக்கவும், ஆண்களுக்கு உயர் பதவிகள் வழங்குவது போலவே பெண்களுக்கும் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். நாட்டில் மணமுறிவு சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம் கல்வி அறிவின் பெருக்கம் தான் என்று பா.ஜ.க. வின் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு பெண்கள் மீதான தன் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றமும் கண்டித்திருக்கிறது.

அடுத்த செய்தி