ஆப்நகரம்

ரூபாய் நோட்டு தொடர்பான வழக்கு: டிச.,2க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ரூபாய் நோட்டு தொடர்பான வழக்கை, டிசம்பர் 2ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

TNN 25 Nov 2016, 1:19 pm
டெல்லி: ரூபாய் நோட்டு தொடர்பான வழக்கை, டிசம்பர் 2ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
Samayam Tamil supreme court defers hearing of petitions against ban to december 2 in demonetisation
ரூபாய் நோட்டு தொடர்பான வழக்கு: டிச.,2க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்


கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் இந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் கீழ் அல்லது ஒரே நீதிமன்றத்தின் கீழ் ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபில், ரூபாய் நோட்டுக்கள் குறித்த வழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசின் செயல்பாடு சட்ட விரோதமானது என்றும், இது சாதாரண மக்கள், விவசாயிகள், வர்த்தகர்களை மிகவும் பாதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் கைகளில் பணமின்றி, வீதிகளில் நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ரூபாய் நோட்டுக்கள் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் இந்த வழக்கை, வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Supreme Court defers hearing of petitions against ban to December 2 in Demonetisation.

அடுத்த செய்தி