ஆப்நகரம்

இனி நீதிமன்ற விசாரணையை நேரலையில் பாருங்கள்

நீதிமன்றங்களில் நடக்கும் அனைத்து வழக்குகளின் விசாரணைகளையும் நேரலை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jul 2018, 2:54 pm
நீதிமன்றங்களில் நடக்கும் அனைத்து வழக்குகளின் விசாரணைகளையும் நேரலை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil image027


இது தொடர்பாக பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் அனைத்து நீதிமன்ற நிகழ்வுகளையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்று கூறியுள்ளார்.

முதல்படியாக உச்சநீதிமன்றத்தில் இருந்து இதனை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்த மற்ற நீதீமன்றங்களுக்கும் விரிவாக்கப்பட உள்ளது.

இது பற்றி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறும் போது, பாலியல் வன்கொடுமை வழக்குகள், விவாகரத்து வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகளின் விசாரணைகளை நேரலை செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

இதற்கான வழிகாட்டுதல்களை ஒரு அறிக்கையாக சம்ர்பிக்குமாறும் தலைமை வழக்கறிஞரை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டுக்கொண்டிருக்கிறார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் என்றும் உச்சநீதிமன்ற பார் கவுன்சிலில் வழக்கறிஞர்கள் இது பற்றிய கருத்துகளைக் கூறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி