டெல்லி: ஆதார் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் எண்ணை வங்கி, மொபைல் எண், பான் கார்டு என இதனுடன் இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான சேவைகளுக்கான ஆதார் இணைப்புக்கும் கால அவகாசத்தை மார்ச் 31, 2018 வரை அவகாசம் அளித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்படி இந்த மாத இறுதியுடன் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிகிறது.
இந்நிலையில் மத்திய அரசு காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து ஏதேனும் முடிவெடுத்துள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு எந்த நிலைப்பாடும் எடுக்காததாக பதிலளித்தது.
இதன் எதிரொலியாக உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என்றும் எதற்கும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Supreme Court says mandatory #Aadhaar linking with bank accounts and mobile phones will stand extended indefinitely till the judgement is pronounced pic.twitter.com/X8ZzrcjMBC — ANI (@ANI) March 13, 2018 இதன் மூலம் இந்த மாத இறுதிக்குள் ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சமானிய மக்கள் பலரும் நிம்மதி அடைவார்கள் என்று கருதப்படுகிறது.
அனைத்து விதமான சேவைகளுக்கான ஆதார் இணைப்புக்கும் கால அவகாசத்தை மார்ச் 31, 2018 வரை அவகாசம் அளித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன்படி இந்த மாத இறுதியுடன் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிகிறது.
இந்நிலையில் மத்திய அரசு காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து ஏதேனும் முடிவெடுத்துள்ளதா என்று உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு எந்த நிலைப்பாடும் எடுக்காததாக பதிலளித்தது.
இதன் எதிரொலியாக உச்சநீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கும் வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என்றும் எதற்கும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
Supreme Court says mandatory #Aadhaar linking with bank accounts and mobile phones will stand extended indefinitely till the judgement is pronounced pic.twitter.com/X8ZzrcjMBC — ANI (@ANI) March 13, 2018 இதன் மூலம் இந்த மாத இறுதிக்குள் ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் இணைக்க வேண்டும் என்ற காலக்கெடு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சமானிய மக்கள் பலரும் நிம்மதி அடைவார்கள் என்று கருதப்படுகிறது.