ஆப்நகரம்

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என முடிவு செய்தது.

Samayam Tamil 28 Oct 2018, 9:07 am
அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை புதிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
Samayam Tamil gavel


அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என முடிவு செய்தது.

மசூதிக்கு சென்று தொழுகை செய்தல் இஸ்லாமின் ஒருங்கிணைந்த முறையா? என்பதை விவாதிக்க அவசியம் இல்லை எனவும் தங்கள் உத்தரவில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கை புதிய அமர்வில் விசாரிப்பதாக அறிவித்தனர். இதன்படி, நாளை (திங்கட்கிழமை) அயோத்தி வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

அடுத்த செய்தி