ஆப்நகரம்

உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம்

​மாநில சுயாட்சி குறித்து பலரும் விழிப்புணர்வு பெற்று பொது வெளிகளில் பேசத்தொடங்கி வரும் நிலையில், ​இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மாநில அதிகாரம் குறித்து தெரிவித்த இந்த கருத்துக்கு பெரும் வரவேற்பும் எழுந்துள்ளது.

Samayam Tamil 27 Aug 2020, 11:13 am
ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கிட்டில் அருந்ததியரின் பிரிவினருக்கான உள் இட ஒதுக்கிடு வழங்க தமிழ்நாடு அரசு 2009ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது.
Samayam Tamil supreme court


இட ஒதுக்கீடே அரசியலமைப்புக்கு எதிரானது என்று சிலர் வாதிட்டு வரும் நிலையில், உள் இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டு இந்த உள் இட ஒதுக்கீடு முறையை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு அனைத்து தரப்பு விசாரணையும் முடித்த பிறகு, இன்று தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வுக்கு மாற்றியுள்ளது.



இனி 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில், புதிதாக விசாரிக்கப்பட்டு புதிய தீர்ப்பு வெளியாகும். அதுவரையில், உள் இட ஒதுக்கீடு வழங்கும் முறைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பதால், இந்த உள் இட ஒதுக்கீடு முறைக்கு எந்த ஆபத்தும் இல்லை.

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு என்றால் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

அதே சமயம், இந்த தீர்ப்பில் அதிமுக்கியமான அறிவிப்பு ஒன்று கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அதாவது உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் என்பது மாநில அரசுகளின் உரிமைக்கு உட்பட்ட ஒன்று. அதற்கு முழு அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநில சுயாட்சி குறித்து பலரும் விழிப்புணர்வு பெற்று பொது வெளிகளில் பேசத்தொடங்கி வரும் நிலையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மாநில அதிகாரம் குறித்து தெரிவித்த இந்த கருத்துக்கு பெரும் வரவேற்பும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி