ஆப்நகரம்

காவிரி வழக்கு இறுதிகட்ட விசாரணை: 3 மாநிலங்களும் வல்லுநர் குழுவை அழைத்து வரவேண்டும்: உச்சநீதிமன்றம்

காவிரி நீரின் இறுதிகட்ட வழக்கு விசாரணைக்கு 3 மாநிலங்களும் தங்களது வல்லுநர் குழுவை அழைத்து வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

TNN 9 Aug 2017, 4:45 pm
காவிரி நீரின் இறுதிகட்ட வழக்கு விசாரணைக்கு 3 மாநிலங்களும் தங்களது வல்லுநர் குழுவை அழைத்து வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Samayam Tamil supreme court ordered three states cauvery experts for argument
காவிரி வழக்கு இறுதிகட்ட விசாரணை: 3 மாநிலங்களும் வல்லுநர் குழுவை அழைத்து வரவேண்டும்: உச்சநீதிமன்றம்


காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலஙள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. காவிரி வழக்கின் இறுதிகட்ட விசாரணை கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், 3 மாநிலங்களின் விவாதங்களும் கேட்டறியப்பட்டது. அதன் பின்னர், தமிழக அரசு புதிய அணைகளைக் ஏன் கட்டக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு, புதிய் அணை கட்டுவதற்கு தமிழகத்தில் புவியியல் அமைப்பு இல்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா உள்பட நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் காவிரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறுகையில், காவிரி நீர் படுகைகள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக இருந்தாலும், தமிழகத்தில் தான் மக்கள் தொகை அதிகம் உள்ளது. மேலும், கர்நாடகாவுக்கு தண்ணீர் கொடுத்தால், தமிழகத்திற்கு தண்ணீர் இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.

இதன் பின்னர், நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதிகள், 3 மாநிலங்களின் வல்லுநர்களையும் அழைத்து வரும்படி உத்தரவிட்டனர். அப்போது அவர்களுக்கு 45 நிமிடங்கள் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி