ஆப்நகரம்

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இயற்கைக்கு மாறான வகையில் உடலுறுவில் ஈடுபடும் செயல் ஆயுள் தண்டைக்குரிய குற்றம் என்று சட்டப்பிரிவு 377 குறிப்பிடுகிறது.

Samayam Tamil 17 Jul 2018, 7:28 pm
ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். இயற்கைக்கு மாறான வகையில் உடலுறுவில் ஈடுபடும் செயல் ஆயுள் தண்டைக்குரிய குற்றம் என்று சட்டப்பிரிவு 377 குறிப்பிடுகிறது.
Samayam Tamil 1024px-Rainbow_flag_and_blue_skies
ஓரினச்சேர்க்கைக்கு எதிரான வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்


இதற்கு கீழ் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டைனை அல்லது அபாரத்துடன் கூடிய 10 ஆண்டு சிறை வழங்கப்படும். உலகளவில் பல நாடுகளில் ஓரினச்சேர்க்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கு ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டில் இந்த சட்டப்பிரிவை நீக்ககோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதி நடவடிக்கை எடுப்பது தவறு என்று தீர்பளிக்கப்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, 2013ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது இயற்கைக்கு மாற்றான உடலுறவு எதுவும் சட்டவிரோதம் என உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து 377வது சட்டப்பிரிவு மீண்டும் சர்ச்சைக்குள்ளானது. அதை மறுபரிசீலனை செய்யக்கோரியும், 377 சட்டப்பிரிவை நீக்கும் படியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த வழக்கு தொடர்பான முடிவை எடுக்க நீதிபதிகளின் பொறுப்பேறிக்கே மத்திய அரசு விட்டுவிடுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.

அடுத்த செய்தி