ஆப்நகரம்

நீதிபதி லோயா வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அமித் ஷா தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்து உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ஏற்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jan 2018, 6:20 pm
அமித் ஷா தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்து உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ஏற்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Samayam Tamil supreme court takes over cases on judge loyas death
நீதிபதி லோயா வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை


2005ஆம் ஆண்டு சோராபுதீன் போலி என்பவர் குஜராத் போலீசாரின் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்த வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது.

இவ்வழக்கில் அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதைய பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லோயா 2014ஆம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். பின்னர், அமித் ஷாவும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே நிதிபதி லோயா மரணத்தில் மர்மம் நிறைந்துள்ளதாக மும்பை, நாக்பூர் உயர்நீதிமன்றங்களில் இரண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டன. அண்மையில் உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அனுவமிக்க நீதிபதிகளுக்கு ஒதுக்காமல் நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு ஒதுக்கினார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. இதனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

இதனையடுத்து அருண் மிஸ்ரா இந்த வழக்கிலிருந்து ஒதுங்கினார். தலைமை நீதிபதி அமர்வுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு, அடுத்த விசாரணை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்துவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி