ஆப்நகரம்

Bhima Koregaon: பீமா கோரேகான் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

பீமா கோரேகான் மோதல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

Samayam Tamil 27 Sep 2018, 7:30 pm
டெல்லி: பீமா கோரேகான் கலவரத்தில் தொடர்பிருப்பதாக ஐந்து சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
Samayam Tamil Koregaon-Battle


பீகா கோரேகான் மோதல் வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, ஹரியாணா, கோவா ஆகிய மாநிலங்களில் போலீசார் நடத்திய சோதனைகளில் சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

கைதான 5 பேரும் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் அமைப்பான மாவோயிஸ்ட் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும் இந்த ஆண்டு புனே அருகே நடந்த பீமா கோரேகான் மோதலைத் தூண்டிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதன் அடிப்படையில் சட்டவிரோத நடவடிக்கை்கள் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பல இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்ய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் மற்றும் நீதிபதி சந்தரசூத் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்த முடிவும் நாளைய தீர்ப்பில் இடம்பெறும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி