ஆப்நகரம்

சமூகநலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்குவதை எதிர்த்து மேற்கு வங்க அரசு மனு!

சமுக நலத்திட்டங்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

TNN 27 Oct 2017, 6:13 pm
சமுக நலத்திட்டங்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
Samayam Tamil supreme court to hear west bengals plea against linking aadhaar to social welfare schemes
சமூகநலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்குவதை எதிர்த்து மேற்கு வங்க அரசு மனு!


அரசு ஓய்வூதியத்திலிருந்து, சமையலுக்கான கேஸ்சிலிண்டர் வரை ஆதாரை கட்டாயமாக்கியிருக்கிறது மத்திய அரசு. இதனை எதிர்த்து ஏற்கனவே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து வெளியிட்டு இருந்தார். எனது போன் வேலை செய்யாவிட்டலும் சரி ஆதாரை கட்டாயமாக்க முடியாது என்று அதிரடியாக தெரிவித்து இருந்தார்.

தற்போது மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. சமூக நலத்திட்டத்திற்கு ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது. இந்த வழக்கில் என்ன தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது. ஏற்கனவே, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பகிரங்கமாக எதிர்த்து வந்தவர் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

supreme court to hear west bengal’s plea against linking aadhaar to social welfare schemes

அடுத்த செய்தி