ஆப்நகரம்

சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

TNN 14 Feb 2017, 11:07 am
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil supreme court verdict on disproportionate assets case against jayalalithaa sasikala sudhakaran ilavarasi
சொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பு


முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில் கூறியிருந்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

1. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு உறுதிசெய்யப்படுகிறது.

2. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் படி, வி.கே.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம்.

3. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு ரத்து.

4. வி.கே.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

5. பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகிய நீதிபதிகள் இருவரும் ஒருமித்த தீர்ப்பு.

சொத்துக்குவிப்பு வழக்கின் சுருக்கமான பின்னணி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை இறுதித்தீர்ப்பை அறிவிக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் ஜெயலலிதா தவிர, ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் வி.கே.சசிகலாவின் சகோதரரான ஜெயராமனின் மனைவி இளவரசி ஆகிய நான்கு பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பின், ஜெயலலிதா மற்றும் மற்ற மூவர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் செப்டம்பர் 27, 2014 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்துசெய்து நால்வரையும் விடுதலை செய்தது.

இதனையடுத்து, கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு இறுதித்தீர்ப்பை அறிவித்தது. பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகிய நீதிபதிகள் அடங்கி அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.

அடுத்த செய்தி