ஆப்நகரம்

Sabarimala Temple Verdict: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி – உச்சநீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு உத்தரவு.

Samayam Tamil 28 Sep 2018, 11:46 am
பெண் கடவுள்களை வழிபடும் இந்திய நாட்டில் பெண்கள் பலவீனமானவா்கள் இல்லை என்று கருத்து தொிவித்துள்ள உச்சநீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Sabarimala


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையில் உள்ள பெண்களை அனுதிக்க கூடாது என்ற பழக்கத்தை திருவாங்கூா் தேசவம் போா்டு கடைபிடித்து வருகிறது. இந்த நடடிக்கைகளுக்கு எதிராகவும், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு அரசியல் சாசன அமா்விற்கு மாற்றம் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் குழு இந்த வழக்கை விசாரித்தது. இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில் கருடன் இணைந்து தீா்ப்பை வாசித்தாா். அப்போது, நீண்ட காலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. சபரிமலை வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல என்று கருத்து தொிவித்த நீதிபதிகள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

இதனைத் தொடா்ந்து நீதிபதி கன்வில்கருடன் இணைந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்தனா்.

இந்து மல்கோத்ரா
மற்றொரு நீதிபதியான இந்து மல்கோத்ரா மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சமஉரிமை என்பதுடன் மதரீதியான பழக்க வழக்கங்களை தொடா்பு படுத்தக் கூடாது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று தொிவித்து வழக்கில் மாறுபட்ட தீா்ப்பை வழங்கினாா்.

இருப்பினும் 5 நீதிபதிகள் கொண்ட அமா்வில் 4 நீதிபதிகள் ஒரு கருத்தையும், மற்றொரு நீதிபதி மாறுபட்ட கருத்தையும் வழங்கியதால் 4 நீதிபதிகள் வழங்கிய தீா்ப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி