ஆப்நகரம்

Article 370: ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?- என்ன சொல்லப் போகிறது உச்ச நீதிமன்றம்!

ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Samayam Tamil 10 Jan 2020, 9:23 am
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை பிறப்பித்தது.
Samayam Tamil Jammu


இதனை அமல்படுத்தும் நடவடிக்கையாக அம்மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இணைய, மொபைல் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன.

அட இன்னைக்கு சந்திர கிரகணமா?- எத்தனை மணிக்கு, எங்கு பார்க்கலாம்!

பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது தொடங்கிய பிரச்சினை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இன்னும் பல இடங்களில் பலவிதமான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் சில பொதுநல வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

கோட்டையில் ஆட்டம் கண்ட பாஜக; மண்ணைக் கவ்விய நிதின், பட்நாவிஸ்!

இந்த வழக்குகளை நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி முடிவு பெற்றது.

இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்னதாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த தூதர்கள் கொண்ட குழு ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர்.

ஜேஎன்யூ துணைவேந்தரை பதவியிலிருந்து தூக்கணும்: கொத்தளிக்கும் பாஜக மூத்த தலைவர்!!

அங்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்முவை சந்தித்து பேசுகின்றனர். காஷ்மீரில் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்வர். அங்குள்ள மக்கள் குழுவினரையும் சந்திப்பர் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி