ஆப்நகரம்

கருணைக் கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்றம்

மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாதவர்களுக்கு கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Mar 2018, 11:48 am
டெல்லி: மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற இயலாதவர்களுக்கு கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil supreme courts verdict on passive euthanasia
கருணைக் கொலைக்கு அனுமதி: உச்சநீதிமன்றம்


கருணைக் கொலை தொடர்பான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை அளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த இத்தீர்ப்பில், கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என்றும் மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத நிலையில் செயற்கைச் சுவாசம் அளிப்பதை நிறுத்துவது போன்ற வழிகளில் கருணைக்கொலையை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


நெதர்லாந்து, பெல்ஜியம், கொலம்பியா, கனடா போன்ற சில நாடுகளிலும் அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் சில விதிமுறைகளின் படி கருணைக்கொலை செய்வதைச் சட்டபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி