ஆப்நகரம்

மோடியின் இடத்தைப் பிடித்த அமைச்சர்

மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரவுக்கு பிரதமர் மோடி வசம் ஒப்படைக்கப்பட்ட துறை கூடுதலாக மாற்றி அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Mar 2018, 3:52 pm
மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரவுக்கு பிரதமர் மோடி வசம் ஒப்படைக்கப்பட்ட துறை கூடுதலாக மாற்றி அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil suresh prabhu gets additional charge of civil aviation ministry
மோடியின் இடத்தைப் பிடித்த அமைச்சர்


2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் உருவாகப்பட்டது. அப்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து இன்னும் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து மத்திய அமைச்சரவையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஒய்.எஸ்.சௌத்ரி ஆகிய அமைச்சர்கள் கடந்த 8ஆம் தேதி ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, அஷோக் கஜபதி ராஜு வகித்து வந்த விமான போக்குவரத்து துறையை பொறுப்புகளை பிரதமர் மோடி தற்காலிகமாக ஏற்றார். இந்நிலையில், பிரதமரின் அறிவுறுத்தல் படி, விமானப் போக்குவரத்துத் துறையை வர்த்தக அமைச்சராக உள்ள சுரேஷ் பிரபுவுக்கு கூடுதலாக ஒதுக்குவதாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி