ஆப்நகரம்

#Surgicalstrikes செப்.,29 முதல் 25-க்கும் மேற்பட்ட முறை பாக்., அத்துமீறல்

எல்லை தாண்டிய தாக்குதலை #SurgicalStrike இந்துய ராணுவம் நடடியத்தில் இருந்து இன்று வரை சுமார் 25 தடவைக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

TNN 8 Oct 2016, 1:39 pm
புதுதில்லி: எல்லை தாண்டிய தாக்குதலை #SurgicalStrike இந்துய ராணுவம் நடடியத்தில் இருந்து இன்று வரை சுமார் 25 தடவைக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
Samayam Tamil surgicalstrikes more than 25 incidences of ceasefire violation from pakistani troops since sep 29
#Surgicalstrikes செப்.,29 முதல் 25-க்கும் மேற்பட்ட முறை பாக்., அத்துமீறல்


ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில் தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், தக்க பதிலடியை இந்திய அரசு கொடுத்துள்ளது. உரி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் பொருட்டு, எல்லை தாண்டி தாக்குதல் #SurgicalStrike நடத்திய இந்திய ராணுவம், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதலில், எல்லை பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். சுமார் நான்கு மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில், 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதேசமயம், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த மாதம் 29-ம் தேதியன்று இந்த தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தான ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அன்று முதல் இன்று வரை சுமார் 25 தடவைக்கும் மேலாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ் மாவட்டத்தில் உள்ள மெந்தார் பகுதில் பாகிஸ்தான் படையினர் நடத்திய இன்றைய அத்துமீறலில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More than 25 incidences of ceasefire violation from Pakistani troops since Sep.29 #Surgicalstrikes #CeasefireViolation

அடுத்த செய்தி