புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில், ஊடுருவ முயன்ற நபரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
தற்போது வட இந்தியாவில் கடுமையான குளிரும், பனிப்பொழிவும் உள்ளது. இதை பயன்படுத்தி பயங்கராதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ராணுவ வீரர்கள் இந்திய எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள ஆர்னியா பகுதியில் மூன்று பேர் நடமாடுவதை எல்லைப்படையினர் கண்காணித்தனர். ராணுவத்தினரை கண்டதூ, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றநபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுவருவலைத் தடுக்க பாகிஸ்தான் ராணுவத்தின் இரண்டு நிலைகளை எல்லை பாதுகாப்பு படையினர் அழித்தனர். முன்னதாக நேற்று, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
தற்போது வட இந்தியாவில் கடுமையான குளிரும், பனிப்பொழிவும் உள்ளது. இதை பயன்படுத்தி பயங்கராதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ராணுவ வீரர்கள் இந்திய எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள ஆர்னியா பகுதியில் மூன்று பேர் நடமாடுவதை எல்லைப்படையினர் கண்காணித்தனர். ராணுவத்தினரை கண்டதூ, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றநபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுவருவலைத் தடுக்க பாகிஸ்தான் ராணுவத்தின் இரண்டு நிலைகளை எல்லை பாதுகாப்பு படையினர் அழித்தனர். முன்னதாக நேற்று, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.