ஆப்நகரம்

தூய்மை இந்தியா திட்டத்தால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் தவிர்ப்பு; சுகாதார நிறுவனம் பாராட்டு!

மத்திய அரசு திட்டம் மூலம் வயிற்றுப் போக்கு மரணங்கள் குறைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை பாராட்டியுள்ளது.

Samayam Tamil 4 Aug 2018, 9:44 pm
புதுடெல்லி: மத்திய அரசு திட்டம் மூலம் வயிற்றுப் போக்கு மரணங்கள் குறைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை பாராட்டியுள்ளது.
Samayam Tamil Swacch Bharat


கடந்த 2014ஆம் ஆண்டு, தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்மூலம் வயிற்றுப் போக்கால் ஏற்படும் 1.8 லட்சம் நபர்களின் மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசிற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரும் அக்டோபர் 2019 வரை 100% அர்ப்பணிப்புடன் தூய்மை இந்தியா திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், வயிற்றுப் போக்கால் ஏற்படும் 3 லட்சம் உயிரிழப்புகள் வரை தடுக்கலாம்.

இந்த திட்டம் மூலம், திறந்தவெளி கழிப்பிட முறை ஒழிக்கப்பட்டு வருகிறது. இது பல்வேறு நோய்கள் வராமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வீடுகளில் சுகாதார மேலாண்மை 2016 - 2018 காலக்கட்டத்தில் ஆண்டிற்கு 13% அளவிற்கு அதிகரித்து வருகிறது.

Swachh Bharat could help avert over 3L deaths says WHO.

அடுத்த செய்தி