ஆப்நகரம்

கை மாறிய குழந்தை ஐந்து மாதத்துக்கு பின் அம்மாவிடம் சேர்ந்த அதிசயம்!

ஐந்து மாதங்களுக்கு முன் ஆஸ்பத்திரியில் மாறிய குழந்தை மீண்டும் தனது அம்மாவிடமே வந்து சேர்ந்தது.

TOI Contributor 27 Oct 2016, 3:17 am
சிம்லா: ஐந்து மாதங்களுக்கு முன் ஆஸ்பத்திரியில் மாறிய குழந்தை மீண்டும் தனது அம்மாவிடமே வந்து சேர்ந்தது.
Samayam Tamil swapped in hospital at birth boy and girl united with parents after 5 months
கை மாறிய குழந்தை ஐந்து மாதத்துக்கு பின் அம்மாவிடம் சேர்ந்த அதிசயம்!


சிம்லாவின் கமலா நேரு மருத்துவமனையில் கடந்த மே 26ல் ஷீத்தல் என்ற பெண் பிரசவத்தவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தர். அதே நாளில் அஞ்சனா என்ற பெண்ணும் பிரசவத்தவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஷீத்தலுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரின் கையில் ஒரு பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ஷீத்தல், மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதனால், இமாச்சல பிரதேச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். இதனால் அஞ்சனாவை அழைத்து விசாரித்த நீதிபதிகள், குழந்தைகளுக்கு டி.என்.ஏ., சோதனை செய்து பெற்றோரை உறுதி செய்யும்படி உ த்தரவிட்டது.

இதையடுத்து டி.என்.ஏ., சோதனை நடத்தப்பட்டதில், அஞ்சனாவிக்கு பெண் குழந்தை பிறந்ததும், ஷீத்தலுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது உறுதி செய்து கோர்ட் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி