ஆப்நகரம்

அமித் ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல்; மருத்துவமனையில் அனுமதி

பன்றிக் காய்ச்சல் தாக்கியதால் பாஜ., தேசியத் தலைவர் அமித் ஷா தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது குணமடைந்து வருவதாக அவரே கூறினார்.

Samayam Tamil 16 Jan 2019, 10:46 pm
பன்றிக் காய்ச்சல் தாக்கியதால் பாஜ., தேசியத் தலைவர் அமித் ஷா தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது குணமடைந்து வருவதாக அவரே கூறினார்.
Samayam Tamil Amit Shah


பன்றிக் காய்ச்சல் தாக்கியதால் திடீர் மூச்சுத்திணறல், நெஞ்சு காட்டம் மற்றும் உடல் பாதிப்பு ஏற்பட்டு, பாஜ., தேசியத் தலைவர் அமித் ஷா தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது குணமடைந்து வருவதாக அவரே கூறியுள்ளார். கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களின் வேண்டுதல் மற்றும் நல் உள்ளத்தால் தான் குணமடைந்து வருவதாக அவர் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டரில் கூறும்போது, ’அமித் ஷா அவர்களை மருத்துவமனை சென்று சந்தித்தேன். அவர் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 9 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி