ஆப்நகரம்

டிராபிக் சிக்னலா? உடனே இஞ்ஜினை ஆப் செய்யுங்கள் - ரூ.250 கோடி வரை மிச்சம் பண்ணலாம்!

சிக்னல்களில் இஞ்ஜின் ஆப் செய்து வைப்பதால், எவ்வளவு எரிபொருளை சிக்கனம் செய்யலாம் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 23 Sep 2018, 7:58 am
PCRA எனப்படும் பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகம் டிராபிக் சிக்னல்களில் வாகனங்களின் இஞ்ஜின் பயன்பாடு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.
Samayam Tamil Traffic


இதுதொடர்பான அறிக்கையை டெல்லி கருத்தரங்கில் PCRA நிர்வாக அலோக் திரிபாதி சமர்பித்தார். அதில், நாடு முழுவதும் உள்ள மிகவும் பிஸியான சாலைகளில் ரெட் சிக்னல், சராசரியாக 120 முதல் 180 வினாடிகள் வரை பயன்பாட்டில் இருக்கின்றன.

அப்போது 20 வினாடிகளாவது நமது இஞ்ஜினை ஆப் செய்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், ரூ.250 கோடி அளவிற்கு எரிபொருளை சேமித்து வைக்கலாம். மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடும் பெருமளவு தவிர்க்கப்படும் வாய்ப்பு உண்டாகிறது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக மத்திய சாலை ஆய்வு நிறுவனம், டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், எரிபொருள் சிக்கனம் என்பது அத்தியாவசியமாகிறது.

Switch Off your vehicle engine in the Traffic signals and save Rs.250 crore.

அடுத்த செய்தி