ஆப்நகரம்

தந்தையால் பலாத்காரம்: கர்ப்பம் தரித்த மகளுக்கு சவுக்கடி!

தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான பெண்ணை மகாராஷ்டிரா மாநில கிராமப் பஞ்சாயத்து ஒன்றில் மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

TOI Contributor 4 Mar 2016, 10:53 pm
தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான பெண்ணை மகாராஷ்டிரா மாநில கிராமப் பஞ்சாயத்து ஒன்றில் மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Samayam Tamil talibani justice minor girl whipped publicly for not resisting rape by father
தந்தையால் பலாத்காரம்: கர்ப்பம் தரித்த மகளுக்கு சவுக்கடி!


மகாராஷ்டிரா மாநிலம் சடாரா மாவட்டத்தில் கோபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 14 வயது மகளை தொடர்ந்து நான்கு மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள். இந்த விஷயம் அந்த கிராமப் பஞ்சாயத்துக்கு தெரிய வர தலிபான் தீவிரவாதிகள் ஸ்டைலில் தந்தைக்கு 10 சவுக்கடியும், தந்தையின் செயலை தடுக்காத குற்றச்சாட்டின் கீழ் மகளுக்கு 10 சவுக்கடியும் அளித்து தீர்ப்பளித்த்னர்.

இதையடுத்து, தந்தை செய்த குற்றத்திற்கு, ஊர் மக்கள் கூடி நிற்க தந்தையையும், கர்ப்பமான அந்தப் பெண்ணையும் சவுக்கால் அடித்தனர்.

இந்த புகைப்படங்களை எடுத்துச் சென்று போலீசில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சச்சின் பிஷே புகார் அளித்தார். மேலும், மகளை கெடுத்த தந்தையையும், தந்தை செய்த குற்றத்திற்காக ஒன்றும் அறியாத மைனர் பெண்ணுக்கு சவுக்கடி கொடுத்த பஞ்சாயத்து பொறுப்பாளர்களையும் தண்டிக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் சச்சின் கேட்டுக் கொண்டார்.

அடுத்த செய்தி