ஆப்நகரம்

ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதி இன்று விடுதலை

ஆருஷி கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லாமல் விடுவிக்கப்பட்ட அவரது பெற்றோர் இன்று சிறையிலிருந்து வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TOI Contributor 16 Oct 2017, 5:19 pm
ஆருஷி கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லாமல் விடுவிக்கப்பட்ட அவரது பெற்றோர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியேறியுள்ளனர்.
Samayam Tamil talwars set to walk out of jail today
ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதி இன்று விடுதலை


கடந்த 2008ஆம் ஆண்டு நொய்டாவைச் சேர்ந்த ஆருஷி என்ற சிறுமியும் அவரது வீட்டில் வேலை பார்க்கும் ஹேம்ராஜ் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிறுமி ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் ஆகியோர் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த அகமதாபாத் உயர்நீதிமன்றம், தல்வார் தம்பதிகள் மீதான கொலை குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் எதிரொலியாக இன்று ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் ஆகியோர் தஸ்னா சிறையிலிருந்து வெளியே வந்திருக்கின்றனர். பல் மருத்துவர்களான அவர்கள் சிறையில் இருந்தபோது கைதிகளுக்கு மருத்துவம் செய்ததற்காக அளிக்கப்படும் ரூ.49,500 தொகையை வாங்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தல்வார் தம்பதி விடுவிக்கப்பட்ட பிறகு, இவ்வழக்கு விசாரணையில் பங்கு பெற்ற தடயவியல் நிபுணர்கள் இவ்வழக்கில் முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி