ஆப்நகரம்

மணிரத்னத்திற்கு ஆதரவு தெரிவித்த பாரதிராஜா

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது மிகுந்த வருத்தமளிப்பதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Oct 2019, 12:09 pm
சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் குழு வன்முறையால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தக் கொடுமையைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குநர் மணிரத்னம், அடூர் கோபால கிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதினர். இதற்காக இவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Samayam Tamil Untitled collage (2)


தேச துரோக வழக்கு மானுடத்தின் மீதான கொலைவெறி தாக்குதலை குறைக்குமா?

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் இயக்குநர் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது என்று தங்களுடைய கவலையை தானே குறிப்பிட்டிருந்தார்கள். இதற்காக தேசவிரோத வழக்குப் பதிவு செய்வதை ஏற்கமுடியாது. அரசு சார்பில் பேசியவர்கள், மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்ல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரையும் மதிப்பதால்தான் கடிதம் எழுதியிருக்கிறார்கள் : வைரமுத்து ட்வீட்

மேலும் அவர், “கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும். பொதுவெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதும் பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மவுனமாக்க முயல்வதும் ஏற்கத் தக்கதல்ல” என்று கூறியுள்ளார்.

மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களுக்கு ஆதரவு தெரிவித்த எழுத்தாளர்கள்!

மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி