ஆப்நகரம்

விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு: தமிழில் மோடி பதிவு!!

சீன அதிபருடனான சந்திப்பிற்காக இன்று சென்னை வந்த பிரதமர் மோடி தமிழில், ''சென்னை வந்து இறங்கியுள்ளேன்'' என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Samayam Tamil 11 Oct 2019, 2:31 pm
இன்று சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செண்டை மேளங்கள் முழங்கின.
Samayam Tamil Modi in Chennai


சீன அதிபர் ஷி ஜிங்பிங், பிரதமர் மோடி இருவரும் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளளர். இதற்காக இரண்டு தலைவர்களும் தற்போது சென்னை வந்தடைந்துள்ளனர். சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி நேராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவ்லாங் பீச்சில் இருக்கும் பிஷ்கோவ் ஓட்டலுக்கு சென்றார்.

சென்னை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட தலைவர்கள் வரவேற்றனர்.

Modi Xi Jinping Meet: சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஷி ஜிங்பிங்

இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''சென்னை வந்திறங்கியுள்ளேன்.
கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சீன அதிபர் வருகை: சென்னையில் சீன நபரிடம் போலீஸ் விசாரணை!

சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் சீன மொழியிலும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி