ஆப்நகரம்

மறைந்த அருண் ஜேட்லி உடலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி!

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு, தமிழகத்தில் இருந்து ஏராளமான தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

Samayam Tamil 25 Aug 2019, 1:48 pm
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமாக இருந்த அருண் ஜேட்லி, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
Samayam Tamil Arun Jaitley


அங்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Also Read: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடல் அரசு மரியாதை உடன் இன்று தகனம்!

பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவரால் வர முடியவில்லை. இதையடுத்து அருண் ஜேட்லி உடல் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Also Read: காஷ்மீருக்கு சென்ற தலைவர்கள் திருப்ப அனுப்பப்பட்டனர்!

அங்கு தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் அருண் ஜேட்லி உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பிரதமர் மோடியின் மன்-கி-பாத் நிகழ்ச்சி; இன்றைய உரையின் சிறப்புகள் இவை தான்...!

அடுத்த செய்தி