ஆப்நகரம்

எய்ம்ஸ் கல்லூரியில் பயின்ற தமிழக மாணவன் சந்தேக மரணம்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் படித்து வந்த தமிழக மாணவன் சந்தேகமான முறையில் மரணமடைந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jan 2018, 4:02 pm
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் படித்து வந்த தமிழக மாணவன் சந்தேகமான முறையில் மரணமடைந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tamil student commit suicide in aiims medical college
எய்ம்ஸ் கல்லூரியில் பயின்ற தமிழக மாணவன் சந்தேக மரணம்!


திருப்பூரைச் சேர்ந்த மாணவன் சரத் பிரபு. இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ் படித்து வந்தார். இவர் இன்று அதிகாலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சக மாணவர்கள் காலையில் கழிவறை சென்ற போது சரத் பிரபு இறந்த நிலையில் சடலமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தனக்கு தானே இன்சுலின் போட்டுக்கொண்டு மாணவன் சரத் பிரபு. தற்கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாணவன் சரத் பிரபுவின் சடலத்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டரா இல்லை வேறு எவரேனும் கொலை செய்துள்ளனரா என்பது மர்மமாக உள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு, டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் பயின்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், மீண்டும் இதே போன்று சம்பவம் நடந்துள்ளது தமிழக மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி