ஆப்நகரம்

இதுக்கு முன்னாடி தமிழிசைய இப்படி பார்த்திருக்கமாட்டீங்க!

தமிழிசையின்‘புதுகெட் அப்’ என இப்போது வெளியாகி உள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 7 Nov 2019, 9:28 pm
தெலங்கானா மாநிலத்தில், ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள சாரண சாரணியர் கட்டிடத்தில், இன்று சாரண சாரணியர் இயக்கத்தின் விழா சிறப்பாக நடந்தது.
Samayam Tamil TH02FORMERBJPPRESIDENTTAMILISAISOUNDARARAJANTELENGANAGOVERNOR


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் சாரணி உடை அணிந்து வந்த தமிழிசை, தனது வாழ்க்கை குறித்து சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

கடத்துவதற்கு தயாராக இருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 4 பேர் கைது

நிகழ்ச்சியில் தமிழிசை பேசியதாவது:
நானும் சிறுவயதில் சென்னை ராயபுரத்தில் புனித ஆனிஸ் பள்ளியில் சாரண இயக்கத்தில் நான் இருந்தேன். சேவை உள்ளத்தோடு பணியாற்றக்கூடிய எண்ணமும் நாட்டிற்காக நான் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தையும், இந்த சாரண இயக்கத்திலிருந்து நான் கற்றுக் கொண்டேன். இந்த நேரத்தில் எனக்குச் சிறு வயது நினைவு வந்தது.



அதேபோல், சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள சாரண சாரணியர் இயக்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதைப் பெருமையோடு இப்போது நினைவுபடுத்திக் கொள்கிறேன். சாரண சாரணியராக இருக்கும் நீங்கள் அனைவரும் நாட்டை பாதுகாக்க தூண்களாக விலங்கக் கூடியவர்கள் என நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்.! எந்த நேரத்திலும் தேதி வெளியாகலாம்..

இவ்வாறு அவர் பேசினார். தமிழிசையின் இந்த போட்டோ இப்போது இணையத்தில் வைரலாகி, சமூக வலைதளங்களில் பலரின் விவாதப் பொருளாகவே இந்த படம் மாறிவிட்டது.

அடுத்த செய்தி