ஆப்நகரம்

துப்பாக்கி தவறுதலாக வெடித்து தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மரணம்..!

காஷ்மீர் எல்லை பணியில் ஈடுபட்டிருந்த ஹவில்தார் திருமூர்த்தியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Samayam Tamil 31 Jul 2020, 3:15 pm
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ். திருமூர்த்தி. இவர் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவர். இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் கத்துவா அருகே உள்ள எல்லைப்பகுதியில் கடந்த 24 ஆம் தேதி அன்று பணியில் ஈடுபட்டிருந்த திருமூர்த்தியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது. இதனால் அவர் படுகாயம் அடைந்த நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil havildar s thirumoorthy


பெண்ணின் பிறப்புறுப்பில் கொரோனா பரிசோதனை, ரேப் வழக்கில் டெக்னீஷியன் கைது...

பின்னர் அறுவை சிகிச்சையின் முலமாக அவர் உடலை துளைத்த குண்டு நீக்கப்பட்டது. அதனையடுத்து ஹவில்தார் திருமூர்த்தி நலமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில் திடீரென உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டு திருமூர்த்தி இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது.

அடுத்த செய்தி