ஆப்நகரம்

காஷ்மீர் தாங்தர் பனிச்சரிவு: 11 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பனிச்சரிவில் 11 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

Samayam Tamil 6 Jan 2018, 8:51 pm
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த பனிச்சரிவில் 11 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil tangdhar avalanche death toll rises to 11
காஷ்மீர் தாங்தர் பனிச்சரிவு: 11 பேர் பலி


ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் தாங்தரில் உள்ள சதனா மலைப் பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் அந்த வழியாகச் சென்ற ஒரு குழந்தை உட்பட 11 பேர் பலியானதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. மேலும், இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் போலீசார் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பனியில் புதைந்தவர்களைத் தேடும் பணி நடக்கிறது. அப்பகுதியில் தட்பவெட்ப நிலை உறைநிலைக்கு மிகவும் கீழாக இருப்பதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி