ஆப்நகரம்

ஆடு வளர்ப்பவரின் அக்கவுண்டில் 40 லட்சம் டெபாசிட்..!

ஆடு வளர்க்கும் பெண்மணியின் ஜன் தன் வங்கிக் கணக்கில் 40 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TNN 4 Dec 2016, 3:20 pm
பிகார் தலைநகரம் பாட்னாவுக்கு அருகிலுள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் சித்தரா தேவி.ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்,கால்நடைகள் வளர்த்து அதன் மூலமாக தனது குழந்தைகளை வளர்த்து வருகிறார்.இவர் சமீபத்தில் தனது பெயரில் ஜன் தன் கணக்கு ஒன்றை துவங்கினார்.
Samayam Tamil c after november 8
ஆடு வளர்ப்பவரின் அக்கவுண்டில் 40 லட்சம் டெபாசிட்..!


இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ஆம் தேதி கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை அறிவித்த ஒரு வார காலத்தில்,சித்தரா தேவியின் ஜன் தன் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளில் 40 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.இதனை அறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள்,அந்த வங்கிக் கணக்கின் விபரங்களை அறிந்து கொள்வதற்காக சித்தரா தேவியின் வீட்டிற்கு வந்த போதுதான்,அடையாளம் தெரியாத யாரோ அவருடைய கணக்கில் இவ்வளவு பணத்தை டெபாசிட் செய்துள்ளது தெரியவந்துள்ளது.40 லட்ச ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்படுவதற்கு முன்னர் பல நாட்களாக சித்தரா தேவியின் கணக்கில் 560 ரூபாய் மட்டும் இருந்துள்ளது.

இந்த 40 லட்சமும் கருப்புப் பணமாக இருக்கலாம் என வருமானவரி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.எனவே இந்த 40 லட்சத்திற்கும் வரைவோலை தருமாறு அந்த வங்கியை வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.சித்தரா தேவியின் கணக்கில் யார் இவ்வளவு பணத்தை டெபாசிட் செய்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Taxmen draw Rs 40 lakh deposited in Jan-Dhan a/c after November 8

அடுத்த செய்தி