ஆப்நகரம்

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு; தடுப்புக் காவலில் தொண்டர்கள்- என்ன நடக்கிறது ஆந்திராவில்...?

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நரலோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Sep 2019, 9:23 am
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த சூழலில் ஆளுங்கட்சியினர் அரசியல் வன்முறையில் ஈடுபடுவதாகத் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
Samayam Tamil Naidu


இதைக் கண்டித்து, இன்று சந்திரபாபு நாயுடு தலைமையில் பேரணி நடத்தத் திட்டமிட்டு இருந்தது.

பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் : இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்த சூழலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷ் ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பறிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளின் சலுகை... மத்திய அரசு அதிரடி

சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் செல்ல முயன்ற கட்சித் தொண்டர்களை போலீசார் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் பிற தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிருக்குப் போராடும் சிறுவர்கள்.! கடைசி ஆசையை நிறைவேற்றிய போலிஸ் கமிஷனர்

இந்நிலையில் நரசரவ்பேட்டா, சட்டினோப்பள்ளி, பல்னாடு, குர்ஜாலா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி