ஆப்நகரம்

பிரதமர் இல்லத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கைது!

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி பிரதமர் இல்லத்திற்கு வெளியே, தர்ணா போராட்டம் நடத்திய தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 8 Apr 2018, 11:52 am
ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி பிரதமர் இல்லத்திற்கு வெளியே, தர்ணா போராட்டம் நடத்திய தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil பிரதமர் இல்லத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கைது!
பிரதமர் இல்லத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கைது!


ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தின்படி ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால், ஆந்திர அரசுஎதிர்பார்த்த நிதியை கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படாததால், ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்தார்.


இந்நிலையில், சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையாக உருமாறியது. இதைவலியுறுத்தி ஆந்திர எம்பி.க்கள் நாடாளுமன்றத்துக்குள் உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்திற்கு வெளியே தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் இன்று ஒன்று திரண்டனர். கோரிக்கைகள் ஏந்திய பதாகைகளை வைத்திருந்த அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி