ஆப்நகரம்

“ஒருபோதும் கைவிடாதே”... டீ விற்றவரின் மகள் இப்போது ஐஏஎஃப் விமானி...

மத்திய பிரதேசத்தில் தேநீர் வியாபாரம் செய்தவருடைய மகள் தனது நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு ஐ.ஏ.எஃப் விமானப்படையின் விமானியாகியுள்ளார்.

Samayam Tamil 24 Jun 2020, 2:01 pm
மத்திய பிரேதச மாநிலம் நீமுச்சில் தேநீர் விற்பனையாளரின் மகள், 23 வயதான ஆஞ்சல்,.ஐ.ஏ.எஃப் பைலட் ஆக வேண்டும் என்ற தனது கனவை வெற்றிகரமாக பின்தொடர்ந்து, ஆறாவது முயற்சிக்குப் பிறகு விமானியாகியுள்ள நிலையில் சேவைகள் தேர்வு வாரியத்தில் (எஸ்.எஸ்.பி) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil anchal gangwal pilot


கனவு, லட்சியம் உள்ள எவருக்கும் ஒரு இன்ஸ்பிரேசன் இருக்கும். அதுபோல ஆஞ்சலுக்கும் இருந்துள்ளது. அதுகுறித்து அவரது தந்தை சுரேஷ் காங்வால் கூறியதாவது, '' உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 2013 ல் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றுவதற்காக இந்திய விமான படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது அந்த மீட்பு நடவடிக்கைகளைப் பார்த்த தனது மகள் ஐ.ஏ.எஃப்-ல் ஒரு போர் விமானத்தின் பைலட் ஆக வேண்டும் என்ற தனது கனவை வளர்த்துக் கொண்டார் '' என்று அவர் நினைவு கூர்ந்தார்.

ஆஞ்சல் நீமூச்சில் உள்ள அரசு கல்லூரியில் கணினி அறிவியல் படிப்பில் பட்டம் பெற்று பின்னர், மத்தியப் பிரதேச காவல்துறையில் துணை ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் லேபர் இன்ஸ்பெக்டராக தேர்வாகி தற்போது ஐ.ஏ.எஃப். படை விமானி என்ற தனது கனவை நினைவாக்கியுள்ளார். இதற்காக அவர் சேவைகள் தேர்வு வாரியத்தில் 6 ஆமுறை முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஃப் இல் பறக்கும் அதிகாரியாக கம்பீரத்துடன் நிற்கிறார்.

கடந்த சனிக்கிழமை அன்று அதற்கான பட்டமளிப்பு விழா, ஐதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை அகாடமியில் நடைபெற்றது. விழா முடிவில் பேசிய ஆஞ்சல், '' கடினமான காலங்களில் கடினமாக இருக்க கற்றுக்கொடுத்த என் தந்தைக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனது இலக்கை அடைய, எனது தந்தை கற்பித்த “ஒருபோதும் கைவிடாதே” என்ற மந்திரத்தை நான் பின்பற்றினேன். அவரது மகள் ஒரு விமான படை விமானியாக சீருடையில் இருப்பதை அவர் தொலைக்காட்சியில் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டார் '' என நெகிழ்ச்சியாக கூறினார்.

அடுத்த செய்தி