ஆப்நகரம்

அடிச்சாரு பாரு சஸ்பென்ஷன் ஆர்டர்: மாவட்ட ஆட்சியர் அதிரடி

தங்களது பெயரை குழந்தைகளுக்கு எழுத தெரியுமா? தெரியாதா? என அந்த பெற்றோருக்கு தெரியுமா என தெரியவில்லை. ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு தெரிந்து, தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் 5 பேரை பணியிடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TNN 10 Jan 2017, 12:28 pm
ஹைதராபாத்: தங்களது பெயரை குழந்தைகளுக்கு எழுத தெரியுமா? தெரியாதா? என அந்த பெற்றோருக்கு தெரியுமா என தெரியவில்லை. ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு தெரிந்து, தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் 5 பேரை பணியிடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil teachers suspended as class v kids cant write parents names
அடிச்சாரு பாரு சஸ்பென்ஷன் ஆர்டர்: மாவட்ட ஆட்சியர் அதிரடி


தெலங்கானா மாவட்டம் மெஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட அந்த அரசாங்க பள்ளியில் அம் மாவட்ட ஆட்சியர் ரொனால்ட் ரோஸ் திடீரென ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம், அவர்களது பெயர் மற்றும் அவர்களது பெற்றோரின் பெயர்களை தாய்மொழியான தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் எழுதிக் காட்டுமாறு கூறியுள்ளார்.

துரதிருஷ்டவசமாக மாணவர்கள் 40 பேரும், எழுதத் தெரியாமல் திருதிருவென விழி பிதுங்கியுள்ளனர். நிலைமையை புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர், சட்டென ஆசிரியர்கள் பக்கம் திரும்பி, உங்களது குழந்தைகள் எங்கே படிக்கின்றனர் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஆசிரியர்கள், தங்களது குழந்தைகள் தனியார் பள்ளிக் கூடங்களில் படிப்பதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டு கொந்தளித்த ஆட்சியர், அப்பள்ளியில் இருந்து உடனே சென்றதுடன், வாங்கும் சம்பளத்துக்கு சரிவர வேலை பார்க்கவில்லை என கூறி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட ஆய்வின் போது இருந்த ஆசிரியர்கள் 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அப்பகுதி கிராமத் தலைவர், குறிப்பிட்ட அந்த அரசுப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கல்வித் தரம் மோசமாக உள்ளது. பலமுறை புகார் அளித்தும் பயனில்லை. இதனால், மானவர்களின் எண்ணிக்கையும் 350-லிருந்து 186-என கணிசமாக குறைந்துள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
TEACHERS SUSPENDED AS CLASS V KIDS CAN’T WRITE PARENTS’ NAMES

அடுத்த செய்தி