ஆப்நகரம்

ஐபிஎல் இறுதிப் போட்டியை மகனுடன் ரசித்த விஜய் மல்லையா

இந்தியாவில் ரூ. 9000 கோடிக்கு வங்கிகளில் கடன் பெற்று அடைக்காமல் தற்போது லண்டனில் உள்ள விஜய் மல்லையா அங்கு தனது மகன் சித்தார்த் மல்லையா மற்றும் நண்பர்களுடன் ஐபிஎல் பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

TOI Contributor 31 May 2016, 5:57 pm
இந்தியாவில் ரூ. 9000 கோடிக்கு வங்கிகளில் கடன் பெற்று அடைக்காமல் தற்போது லண்டனில் உள்ள விஜய் மல்லையா அங்கு தனது மகன் சித்தார்த் மல்லையா மற்றும் நண்பர்களுடன் ஐபிஎல் பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Samayam Tamil tears for taxpayers joy for mallayas
ஐபிஎல் இறுதிப் போட்டியை மகனுடன் ரசித்த விஜய் மல்லையா


இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பவரே விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா. கடந்த ஞாயிற்றுக் கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே இறுதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது.

இந்தப் போட்டியை விஜய் மல்லையா தனது மகனுடன் ரசித்து பார்க்கும் வீடியோதான் அது. இந்த வீடியோவில் பேசி இருக்கும் சித்தார்த், ''லண்டனில் இருந்து நாங்கள் இணைந்து ஐபிஎல் போட்டியை பார்த்து வருகிறோம்'' என்று கூறியுள்ளார். தனது தந்தையை நோக்கி கேராவை சித்தார்த் திருப்ப, ''கோ ஆர்சிபி'' என்று விஜய் மல்லையா கூறுகிறார்.

யுனைடெட் ஸ்பிரிட் தலைவர் பதவியில் இருந்து இறங்கியதும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இயக்குனர் பதவியில் இருந்தும் விஜய் மல்லையா விலகினர். ஆனால், அவரது மகன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் போர்டில் உறுப்பினராக இருக்கிறார்.

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்துமாறு பிரிட்டனிடம் இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி