ஆப்நகரம்

சபரிமலை கோவிலில் கண்ணீருடன் தரிசனம் செய்த போலீஸ் ஐஜி- வைரலான புகைப்படம்

ஐஜி ஸ்ரீஜத், நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் கண்ணீர் மல்க தரிசனம் செய்தது, இணையத்தில் வைரலாகி உள்ளது.

Samayam Tamil 23 Oct 2018, 7:21 pm
சபரிமலைக்கு வந்த பெண்களை போலீஸ் காவலுடன் சன்னிதானம் வரை அழைத்துச் சென்ற காவல்துறை ஐஜி ஸ்ரீஜத், நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் கண்ணீர் மல்க தரிசனம் செய்தது, இணையத்தில் வைரலாகி உள்ளது.
Samayam Tamil சபரிமலை கோவிலில் கண்ணீருடன் தரிசனம் செய்த போலீஸ் ஐஜி- வைரலான புகைப்படம்
சபரிமலை கோவிலில் கண்ணீருடன் தரிசனம் செய்த போலீஸ் ஐஜி- வைரலான புகைப்படம்


இந்தியாவின் மிக முக்கியமான தெய்வீக ஸ்தலங்களில் ஒன்றாக, கேரளா மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில், 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலையில் நுழையலாம் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன், ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, ஐயப்பன் கோவிலில் நுழைய சில பெண்கள் முயற்சித்தனர். ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் போராட்டம் நடத்தியதால், பெண்கள் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை.

இதன்பின், காவல்துறை ஐஜி ஸ்ரீஜத் தலைமையில், பாதுகாப்பு படையினரின் துணையுடன் 3 பெண்கள் சபரிமலை சன்னிதானம் வரை அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கே ஒன்று திரண்ட பகதர்கள், அவர்களை உள்ளே அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, சபரிமலை தரிசனம் நேற்றோடு முடிந்து, நடை அடைக்கப்பட்டது. இதனிடையே, கடைசி நாள் தரிசனத்தின் போது, ஐஜி ஸ்ரீஜத் சாதாரண உடையில், கண்ணீர் வடிய ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்து சென்றார். தற்போது, அந்த படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி