ஆப்நகரம்

செல்ஃபி எடுக்க ரயில் மீதேறிய சிறுவன் உடல் கருகி உயிரிழப்பு

செல்ஃபி மோகத்தால் ரயில் மீதேறிய 15 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் உயிரிழந்தான்.

Samayam Tamil 13 Aug 2018, 5:08 pm
செல்ஃபி மோகத்தால் ரயில் மீதேறிய 15 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் உயிரிழந்தான்.
Samayam Tamil railway_burn_vitim
செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த சிறுவன்


மஹாராஷ்டிராவின் சங்கி பகுதியை சேர்ந்த பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் சிலர் தெலகான் தப்காட் என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது பூனேவில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பெக்தேவாடி என்ற பகுதியில் மின்சார ரயிலுக்காக அவர்கள் வந்திருந்தனர்.

அங்கு சிவப்பு நிற விளக்கு ஒளிர்ந்ததன் காரணமாக, பூனே நோக்கி சென்ற ரயில் வழியில் நின்றுக்கொண்டிருந்தது. இதை பார்த்த சுற்றுலாவிற்கு வந்த சிறுவர்களில் ஒருவர் செல்ஃபி எடுக்க அதன் மீது ஏறினார்.

பிறகு தன் கைப்பேசியில் உள்ள கேமரா மூலம் சில செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த தண்டவாளத்தில் அதிவேகமாக மற்றொரு ரயில் கடந்த சென்றது.

இதில் தடுமாறிய அந்த சிறுவன், ரயில்களை இயக்கும் பவர் கேபிள் மீது விழுந்தார். இதில் உடல் தூக்கிப்போடப்பட்டு, நின்றுக்கொண்டிருந்த ரயிலின் மீது மயங்கமடைந்து விழுந்தான்.

சம்பவம் அறிந்த அதிகாரிகள் சிறுவனை தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு இந்த சம்பவம் அறிந்து சிறுவனின் குடும்பத்தினரும் வந்தனர்.

ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுவனை, அவரது தந்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதாக தெரிவித்தார். இந்நிலையில் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி